10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-இல் வெளி வருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-இல் வெளி வருகிறது

சென்னை,மே 4 - தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப் பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற் கொள்ளப்பட்டன.

ஏப்.24-இல் தொடங்கிய இந்தப்பணிகள் நேற்றுடன் (3.5.2023) நிறைவு பெற்றன. இப்பணியில் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்றுடன் (மே 4) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment