திராவிட மாணவர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சந்திப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

திராவிட மாணவர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சந்திப்புக் கூட்டம்

மருங்கூர், ஏப். 10- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் 7.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை நேர கொள்கை பிரச்சாரமாக எழுச்சி யோடு நடை பெற்றது. 

இக்கூட்டத்திற்கு நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு. ராஜ்மோகன் தலைமை வகித் தார். மாவட்ட இளைஞரணி செய லாளர் சுரேஷ், மாவட்ட இளை ஞரணி துணை தலைவர் வி.ஆர். அறிவுமணி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

திராவிட மாணவர் கழக சட் டக் கல்லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி தொடக்க உரை யாற்றினார். மண்டல இளைஞ ரணி செயலாளர் நாத்திக. பொன் முடி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஜெகதாபட்டினத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடை பெற உள்ள மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, ஆகஸ்ட் மாதம் நடை பெற உள்ள திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் நாகை மாவட்டம் சார்பில் திராவிட மாணவர் கழக, இளைஞரணி தோழர்கள் திரளாக கலந்து கொள் வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாகை மாவட்ட திராவிட மாண வர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டம் இரவு 9.00 மணிய ளவில் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment