ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 22.4.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* குஜராத் மாநிலத்தின் நரோடா பாட்டியா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் 2022இல் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த மேனாள் அமைச்சர் உள்பட அனைவரையும் அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளதானது நீதித்துறையின் நிலையை அம்பலப் படுத்துகிறது என்கிறது தலையங்க செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சும் நிலையில், தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் இடங் களை இழக்கக்கூடும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

தி டெலிகிராப்

* மூன்று மாதங்களில் நான்காவது அய்அய்டி மாணவர் தற்கொலை கெமிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் மகாராட்டிராவை சேர்ந்த கேதார் சுரேஷ் என்பவர் தற்கொலை. கடந்த மூன்று மாதங்களில் இது  நான்காவது மரணமாகும்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மகாராட்டிரா சட்டத்தை அரசமைப்புக்கு முரணாக அறிவித்த உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டது, மேலும் அதன் 2021 தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment