நாகை மாவட்ட கிளைக் கழக செருநல்லூரில் தோழர்களின் சந்திப்பு திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் பங்கேற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

நாகை மாவட்ட கிளைக் கழக செருநல்லூரில் தோழர்களின் சந்திப்பு திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் பங்கேற்க முடிவு

செருநல்லூர், ஏப். 18- கீழ்வேளூர் ஒன்றியம், செருநல்லூர், திராவிடர் கழக கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.4.2023 ஞாயிறு மாலை 7 மணிக்கு செருநல்லூர் வழக்குரைஞர் ஆர்.பெர் னாட்ஷா இல்லத்தில் நடைபெற்றது 

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றான்டு விழா கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண் டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வு டன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன்னிலைபடுத்தி அனைத்து தோழர்களும் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியம் குறித்து  உரையாற்றினார் 

மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மாவட்ட துணைச் செய லாளர் துரைசாமி,மண்டல இளைஞ ரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், பொதுக்குழு உறுப்பினர் ,நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், நாகை நகர அமைப்பாளர் சண்.இரவி. மாவட்ட மகளிரணி தலைவர் பேபி, ஒன்றியத் தலைவர் வேணுகோபால், ஒன்றிய துணைத் தலைவர் அரங்கராசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாக்கியராஜ், ஒன்றிய அமைப்பாளர் பாஸ்கர் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023ஆம் ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும் பிரச்சாரம் நடந் திட கழகத்தோழர்கள் முனைய வேண் டும் என உரையாற்றினர்.

கிளைக்கழக தோழர்கள் மகளிர் உட்பட 40க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். செருநல்லூர் பட்டு, சந்திரா, ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது

* சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் நான்கு கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்ளில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத் திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றியை தெரிவித்து கொள் கிறது 

* தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு விழா தெருமுனை கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராம பிரச்சாரமாக  நடத்துவது 

* அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது, 

*விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது 

* இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கினைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிர்ச்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது

* டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்ச்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக்  இக் கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள் கிறது

* மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

செருநல்லூர் 

புதிய பொறுப்பாளர்கள்

கிராம கிளைத்தலைவர்: அன்புதாசன்

செயலாளர்: அன்புராஜன்

மகளிரணி தலைவர் : விகேஆர். தனம்

மகளிரணி செயலாளர் : சுமதி

No comments:

Post a Comment