தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மய்யம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மய்யம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்

மக்களவையில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்

புதுடில்லி, மார்ச் 22-  தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மய்யம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக மக்களவை உறுப்பினரான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து தருமபுரி தொகு தியின் மக்களவை உறுப்பினரான செந்தில்குமார் விதி எண் 377 கீழ் மக்களவையில் பேசியதாவது: ''தருமபுரி மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் அம் மாவட்டத்தில் உள்ள இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். இந்த ஆராய்ச்சி மய்யம் தொடங்க கடந்த 2010 முயற்சி மேற்கொள் ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட நிர்வா கம் மூலம் நெக்குந்தி கிராமத்தில் அதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப் பட் டது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் அந்த இடத்தினை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

ஆனால் அதன் பிறகு ராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சி மய்யம் தொடங்குவதற்கான எந்த வித மான முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. தொழில்துறையில் பின் தங்கிய தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மய்யம் விரைவாக தொடங்கினால் மாவட் டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மூலம் இப்பணியை விரைவாக தொடங்க வழிவகை செய்ய வேண்டும். தரும புரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மய்யம் தொடங்கி மாவட்டத்தில் உள்ள இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோருகிறேன்.'' இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment