தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தை நாட உ.பி. மாநில பா.ஜ.க.
செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவிற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மார்ச் 8- தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின் றனர்.
தமிழ்நாட்டின் குக்கிராமங்க ளில் கூட வட இந்தியர்கள் தங்கி பணிபுரி கின்றனர். ஆனால் திடீரென தமிழ் நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுகின்ற னர். பாதிக் கப்படுகின்றனர் என பொய்யை வட இந்திய பாஜக வினர் சமூக வலைதளங்களில் திட்டமிட்டே பகிர்ந்தனர். இதனை நாடு முழுவதும் பா.ஜ.க. வினர் சமூக வலைதளங்களில் வெளியிட் டனர். இதனால் தமிழ் நாட்டில் வட இந்தியர்களி டையே அச்சம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு, இத்தகைய வதந்தி பரப்பியவர்கள்மீது வழக் குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் 4 பிரிவு களில் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய் தனர். மேலும் உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மீதும் இதே போல தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் அவரை கைது செய்ய டில்லி, உபிக்கு தமிழ்நாடு காவல்துறையினர் விரைந்து சென்ற னர். ஆனால் பிரசாந்த் உம்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் டில்லி உயர்நீதிமன்றத் தில் தமக்கு முன்பிணை கோரி பிரசாந்த் உம்ரா மனுத் தாக்கல் செய்து இருந்தார். இம்மனுமீது டில்லி உயர்நீதிமன்றத் தில் நேற்று (மார்ச் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது வதந்தி பரப் பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா, இதுவரை மன்னிப்புகூட கேட்க வில்லை என டில்லி நீதிமன்றத் தில் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது.
வந்தந்தியை பரப்புவது இந்தியாவையே பிளக்கும் செயல், தேசவிரோத செயல் என வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து உமா ராவை மார்ச் 20ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தூத் துக்குடி நீதிமன் றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது டில்லி உயர்நீதி மன்றம். வதந்தி வழக்கில் முன் பிணை கோரிய உ.பி. பா.ஜ.க. செய்தி தொடர் பாளர் பிரசாந்த் உம்ராவின் மனு முடித்து வைத்தது.
No comments:
Post a Comment