பெரியார் மருந்தியல் கல்லூரியில் மக்களைத்தேடி மருத்துவ முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மக்களைத்தேடி மருத்துவ முகாம்

பெரியார் மருந்தியல் கல்லூரியில் திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் சார்பில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் மக்களைத்தேடி மருத்துவ முகாம் 28.03.2023 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் மக்களைத்தேடி மருத்துவத்தின் தன்னார் வலர்கள் ஜே. இராஜராஜேஸ்வரி, எஸ். ருக்மணி, ஆர். தேவி மற்றும் எஸ்.மகேஸ்வரி ஆகியோர் கல்லூரியின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். பெரியார் நலவாழ்வு சங்கம் ஏற்பாடு செய்த இம்மருத்துவ முகாமில் முதற்கட்டமாக பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் 123 மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment