வடமாநில தொழிலாளர் பிரச்சினை: பா.ஜ.க., அ.தி.மு.க. போலி வேடம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

வடமாநில தொழிலாளர் பிரச்சினை: பா.ஜ.க., அ.தி.மு.க. போலி வேடம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, மார்ச் 6-  "தமிழ்நாட்டில், நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத் தில், "கரோனா தொற்றுக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த போது அப்போதைய மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க., ஒன்றிய ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக வாய் மூடி மவுனியாக இருந்ததைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

திடீரென இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக தங்கள் வீடு செல்ல பயணச்சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முன்வந்த முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரஸ்தான். அதை அறிவித்தது நான்தான். அதைப் போலவே சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் தங்களு டைய மாநிலம் செல்வதற்கு பேருந்து கட்டணம் ரயில் கட்டணம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அறிவித்தார்கள் அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார்கள்.

இந்த விவகாரத்தில் எங்கே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்து விடுமோ என்று அஞ்சி அந்த நிதி உதவியை அப்பொழுது ஏற்க மறுத்தவர்கள் தான் இந்த ஒன்றிய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் ஆகும். ஆனால் இன்று திடீரென வட மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல பேசுகிறார்கள். இவர்களுடைய போலி வேடம் தமிழ்நாடு மக்களிடையே எடுபடாது. தோல்வியடையும். இங்கே நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசா தாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகி களும் தான்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment