திருமருகல், காரைக்காலில் தமிழர் தலைவர் பரப்புரை [29.3.2023] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

திருமருகல், காரைக்காலில் தமிழர் தலைவர் பரப்புரை [29.3.2023]

காரைக்காலில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை பழங்களை மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினர் சார்பில் வழங்கினார். அந்தப் பழங்கள் மேடையில் ஏலம் விடப்பட்டது. மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ்ராஜ் ரூ.20,000த்திற்கு ஏலத்தில் எடுத்தார். அந்த பணத்தை பெரியார் உலகத்திற்கு வழங்குவதாகத் தமிழர் தலைவர் அறிவித்தார். மேடையில் புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, கழகப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார் மற்றும் புதுச்சேரி மேனாள் அமைச்சர் கமலக்கண்ணன், பன்னீர்செல்வம், ஜெய்சங்கர் உள்பட தோழர்கள் உள்ளனர்.

குடந்தையில் 'ராயாஸ்' தங்கும் விடுதியின் உரிமையாளர் மறைந்த ராயா கோவிந்தராஜன் அவர்களது படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராயா கோவிந்தராஜனின் மகன் ராயா சீனிவாசன் குடும்பத்திற்கு தமிழர் தலைவர் ஆறுதல் கூறினார். உடன்: கழகத் தோழர்களும், உறவினர்களும் உள்ளனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இல. மேகநாதன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். காரைக்காலை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் (வயது 90)   தொண்டினை பாராட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்தார்  சுயமரியாதை சுடரொளி மறைந்த நாராயணசாமி படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். காரைக்கால் மண்டல செயலாளர் பொன். பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 




No comments:

Post a Comment