ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு! கால அவகாசம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு! கால அவகாசம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு

புதுடில்லி, மார்ச் 23- ஆதார் எண்ணுடன்  வாக்காளர் அடை யாள அட்டையை  இணைப்பதற் கான கால அவகாசத்தை  2024ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறி விக்கப்பட்டபடி, வரும் 31ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்  தெரிவித்து உள்ளது. நாடாளுமன் றத்தில் நிறைவேறிய தேர்தல் விதிகள் திருத்த சட்டம் 2021இன் படி, ஆதார் எண்ணுடன் வாக்கா ளர் தகவல்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 2021 ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த பணி, 2023 ஆண்டு மார்ச் 3ஆம் தேதிக்குள் முடிக்கும்படி அறிவிக் கப்பட்டது.

அதன்படி, வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏராளமானோர் தங்களது வாக் காளர் அடையாள அட்டையை இணைத்து வருகின்றனர்.  மேலும்,  தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதார் எண் ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வந்தனர் . வாக்காளர்கள், தங்களது ஆதார் எண் விபரங்களை வாக் காளர் பட்டியலுடன் இணைக்க https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணைய தள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள் ளலாம். தவிர, ஆதார் எண் விவரத்தை வாக்காளர் பதிவு அலு வலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் அளித்து வாக்காளர் பட்டியலு டன் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 31ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறி விக்கை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment