Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெண்ணுரிமை
February 03, 2023 • Viduthalai


ஏதோ சில சந்தர்ப்பங்களில் மண மான இந்துப் பெண்கள் கணவனிடமிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்சமும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள் ளோம். இந்த உரிமைகூட பெண்களுக் குத் தரக்கூடாதென இந்து மகாசபைக் காரரும், சனாதனிகளும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்களாம். இந்தச் சட்டத்தை சட்டசபை நிராகரித்துவிட வேண்டுமெனத் “தேசபக்த” மாளவி யாவும் கேட்டுக் கொண்டாராம். 

பெண்களுக்குக் கலியாண விடு தலைக்கு அனுமதியில்லாமலும், ஒரு கணவன் இருக்கும்போது, மற்றொரு கணவனை மணந்து கொண்டு வாழ உரிமையில்லாதபொழுது, கணவனுக்கு மாத்திரம் மற்றொரு மனைவி கட்டிக் கொள்ள அனுமதியிருப்பதுமான சட் டம் எவ்வளவு புரட்சிகரமானது, மாறுத லானது என்று பேசப்பட்டாலும் - அது உண்மையில் பலனற்றது என்பதே நமது கருத்து.

இந்தச் சட்டமானது இதுவரையிலும் காந்தியாரும், காங்கிரசுக் காரர்களும், இந்து சீர்திருத்தக்காரரும் தீண்டாமை யைப்பற்றிப் பேசிவந்த சூழ்ச்சியைப் போலும் சூழ்ச்சி இல்லாவிட்டால், அறி யாமையைப் போலும், இரண்டுமில்லா விட்டால் ஒரு வீண் வேலையைப்போல்  தான்ஆயிற்றே ஒழிய, வேறொன்று மில்லை.   

நிறைவேறியிருக்கும் புதிய சட்டத் தில் பெண் தனித்திருக்கலாம் என்றிருக் கிறது. இதனால் பெண்ணுக்கு இலாப மென்ன? தனியே இருந்து வேதனைப் பட வேண்டியது தவிர, அல்லது புருஷனால் கருதப்படும் கெட்ட காரியமென்னும் விபசாரமென்று சொல்லப்படும் குற்றத்திற்குப் பெண்களை ஆளாக்கக் கணவன் உள்பட மற்றவர் கள் ஆதாரங்கள் கவனிப்பதைத் தவிர வேறென்ன முடியும்?

ஜீவனாம்சம் என்று சொல்லுவதும் இதற்கு முன் இருந்து வருகிற ஜீவனாம்சமே தவிர புதிய ஜீவனாம்சம் ஒன்றும் இல்லை.

ஜீவ சுபாவங்களின் இயற்கை உணர்ச்சியாகிய இன்ப நுகர்ச்சி திருப்திக்கு வசதியில்லாத கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் வைத்துக்கொண்டு, எந்தவிதமான மாறுதல் செய்தாலும் வருணாசிரமத்திற்குப் புதிய பாதுகாப் பும், வியாக்கியானமும் ஏற்படுவது போலும், புராணங்களுக்குத் தத்துவார்த் தம் சொல்வது போலுந்தான் முடியுமே தவிர வேறில்லை. ஆகவே, பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காகத் தாங்கள் முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்னும் விலங்குகளைத் தகர்த்தெறிய முற்பட்டாலொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து, அனுபவித்துக் கொண்டு வரும் ஆண்களாலும், எப் படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும், பொதுவுடைமைக்காரருடைய புரட்சி யாலும் விடுதலை ஏற்படாது என்பது எமது கருத்து.

- 06.04.1946 - ‘குடிஅரசு’


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn