Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
February 03, 2023 • Viduthalai

உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.

கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட தெய்வீகச் சக்தி என்கின்ற எண்ணமோ மனிதனுக்கு இல்லாமல் இருந்து இருக்குமானால், இன்று மனிதன் குறைந்தது இந்த 3,000 - 4,000 ஆண்டுகளில் அவனது அறிவின் பயனாய், சிந்தனா சக்தியின் பயனாய் 500 ஆண்டுகளாவது உயிர் வாழத்தக்க தன்மையை அடைந்திருப்பான். இறக்கை இல்லாமலேயே ஆகாயத்தில் பறக்கும் சக்தியை அடைந்திருப்பான் என்பதோடு, கவலை இல்லாமலேயே வாழும் தன்மையையும் அடைந்திருப்பான்.

சர்வசக்தி உள்ள கடவுள் ஒன்று இருக்கிறது. ‘எல்லாம் கடவுள் செயல்’ எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலையும் இல்லாமல் இருக்க முடிகிறது?

எனவே, மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்குத் துக்கமும், கவலையும் இல்லாமல் இருப்பதற்கும் “சர்வ சக்தி உள்ள கடவுள்” ஒருவர் இருக்கிறார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்து ஆகவேண்டும்.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என் கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்கு வதைவிட, உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறு இல்லை என்றே சொல்லுவேன்.

மோட்சம் என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், “துக்க நாசம் சுகப்பிராப்தி” என்று தான் சொல்லப்படுகிறது.

இச்சொல்லுக்கு ஆதாரப்பூர்வமான பொருளும் (அர்த்தமும்) இதுவாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலைக்கு அறிவுதான் காரணம். அதாவது ஞானம்தான் என்றும் காணப்படுகிறது. இதனாலேயேதான் “ஞானிக்கு துக்கமில்லை, கவலை இல்லை” என்று சொல்லப்படுவதோடு, “ஞானிக்கு கடவுளும் இல்லை, கல்லெடுப்பும் இல்லை” என்று சொல்லப் படுகிறது.

ஞானி என்றால் என்ன பொருள்? அவன் யார் என்று பார்த்தால் ஞானமுடையவன் ஞானி - புத்தி உடையவன் புத்தன் - அறிவை உடையவன் அறிவன் என்பதாகும். இவர்களுக்கெல் லாம் கடவுள் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?

அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள் என்ற சொல்லே தென்படுவதற்கு இல்லாமல் போய் விடுகிறது. ஞானிக்கு கடவுள் இல்லை என்பது மாத்திரமல்லாமல், “துறவிக்கு கடவுள் இல்லை” என்று சொல்லப்படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால் ஆசை அற்றவன், பற்று அற்றவன் என்பதுதான் பொருள். துறவிக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. அவனுக்கு எதைப் பற்றியும் ஆசை இல்லை. ஆனதால் அவனுக்குக் கடவுளைப் பற்றிய கவலை இல்லை என்பதோடு, அவனுக்குக் கடவுள் தேவையும் இல்லை. இயற்கையோடு இயைந்து கொள்ளுகிறான்.

எனவே, இயற்கையை நல்ல வண்ணம் உணர்ந்து கொள்ளுவது அதற்கேற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவுதான் முன் குறிப்பிடப்பட்ட ஞானமாகும்.

எனவே, பகுத்தறிவு பெற்ற மனித சமுதாயம் ‘மனிதத் தன்மை’ அடைவதற்குப் பகுத்தறிவுவாதியாக, அதாவது பஞ்சேந்திரியங்களுக்குப் புலப்படாத, தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை அவை எவையானாலும் சிந்திக்காமலும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமலும் இருப்பதுதான் மனிதத் தன்மையாகும்.

(தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை

- ‘விடுதலை’ 10.6.1971)

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn