Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தைக்கு என்ன பெயர்?
February 13, 2023 • Viduthalai

கொச்சி, பிப்.13 ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால் ஜியா பவல் பெயர் தாய்க்கு உரிய இடத்திலும், ஜஹாத் பெண்ணாக இருந்து ஆணாக மாறியதால் அவர் பெயர் தந்தைக்குரிய இடத்திலும் இருக்க வேண்டும் என்று அந்த இணையர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் முதல் முறையாக பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம் பிக்கும், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைக்கும் பிறந்த குழந் தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜியாபவல் (வயது 21) ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஆவார். இதே போல் ஜஹாத் பெண் ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. இவர்கள் இருவரும் மாற்று பாலினத் தவர் என்பதால் இளம் வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.இவர்கள் தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று கனவு கண்டனர். இதையடுத்து இவர்கள் கோழிக்கோடு அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவர்களின் ஆலோ சனையை பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக   ஜாஹத் மாறிய போதும் அவரது கருப்பை அகற்றப் படாததால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்து உரிய ஆலோசனை வழங்கினர்.

இந்நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நடனக்கலைஞரான ஜியாபவல் ஜஹாத் கர்ப்பமாக இருந்ததைத் தனது இன்ஸ் டாகிராமில் பதிவு செய் திருந்தார். இந்நிலையில் 8.2.2023 அன்று காலை 9.30 மணியளவில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

இந்த தகவலை ஜியா பவல் மகிழ்ச் சியுடன் பகிர்ந்திருந்தார். மேலும் ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனால் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை இப்போது பொது வெளியில் கூற விரும்ப வில்லை என தெரிவித்துள்ளனர். 

மேலும் ஜியா பவல் தனது சமூக வலைதளப் பதிவில் தனது குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். குழந்தை பெற்றுள்ள மாற்றுப்பாலின இணைய ருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவில் பெண் ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn