Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்:
February 24, 2023 • Viduthalai

ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.24  தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்று (23.2.2023) நடத்திய தாக்குதல் சம்ப வத்தை மிகுந்த வேதனையுடன் சுட்டிக் காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி யுள்ளார். இத்தாக்குதல் நமது மீனவர்கள் மீது இலங்கை நாட்டினர் கடந்த 15.2.2023 அன்று நடத்திய சில நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளதையும் குறிப் பிட்டுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதி யில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நேற்று (23.2.2023) அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படை யினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள், என்ஜின் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும், இத்தாக்குதலில் காயமடைந்த அய்ந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தாக்குதல், அனைத்து பன் னாட்டு விதிமுறைகள் மற்றும் மரபு களை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர் களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்குக் கடுமையான காயங்களையும், பொரு ளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற் படை யினரின் இத்தகைய வன்முறைச் செயல் கள் அதிர்ச்சியளிப்பதுடன், கண்டனத் திற்குரியது என்றும் தெரிவித் துள்ளார். 

நமது மீனவர்கள் தமது வாழ் வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட் டுமே நம்பியுள்ளனர் என்றும், மீனவர் கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத் தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச் சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள தாகவும் முதலமைச்சர் தெரிவித்துள் ளார். 

இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்துச் சென்று, நமது இந்திய மீனவர்கள் மீதான தாக் குதல்களைத் தடுக்க உயர்மட்ட அள வில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn