பா.ஜ.க. வெல்லுவது கடினம்! ராகுல் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

பா.ஜ.க. வெல்லுவது கடினம்! ராகுல் பேட்டி

புதுடில்லி, ஜன.1- காங்கிரசு கட்சியின் மேனாள் தலை வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை 7.9.2022 அன்று தொடங்கினார்.  தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ராகுல் காந்தி செல்லுமிடம் எங்கும் மதச்சார்பின் மையை வலியுறுத்துவோர், கட்சிக்கு அப்பாற்பட்டு தங்களின் பேராதரவினை அளித்து வருகிறார்கள்.

இந்திய ஒற்றுமைப் பயணம் தற்போது தலைநகர் டில்லியை அடைந்துள்ளது. இந்த ஒற்றுமைப் பயணத் திற்கு, குளிர் காலத்தையொட்டி இடைவேளை விடப் பட்டுள்ளது. மீண்டும் 3 ஆம் தேதி காஷ்மீரை நோக்கி நடைப் பயணம் தொடர உள்ளது. 

இந்த நிலையில் ராகுல் காந்தி, டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

நான் மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமைப் பயணம், மக்களுக்கு ஒரு புதிய வேலை மற்றும் சிந்தனை முறையை முன்வைப்பதற்கான ஒரு கட்ட மைப்பை வழங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்குப்பார்வையோடு, திறம்பட ஒன்று பட்டு நிற்கிறபோது, தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது பா.ஜ.க.வுக்கு கடினமாகி விடும். ஆனால் எதிர்க்கட்சிகள் திறம்பட ஒருங்கிணைய வேண்டும். மாற்று கொள்கைகளுடன் மக்களிடம் செல்ல வேண்டும். 

பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப் புணர்வு இருக்கிறது. இனியும் இங்கே தந்திர முறை யிலான அரசியல் சண்டை இருக்காது. அந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது. இந்தியாவின் நிறுவன ரீதியிலான கட்டமைப்பு இப்போது ஒற்றை கொள்கையால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள் இந்தியாவின் அரசியல் வெளியில் முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களைத் தோற் கடிப்பதற்கென்று ஒரு கொள்கை வேண்டும். எதிர்க்கட்சிகள்மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் அவர்களை விரும்புகிறேன். ஆனால், அவர்களுக்கு ஒன்று சொல்வேன். காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மய்ய ரீதியிலான கொள்கை கட்ட மைப்பை வழங்க முடியும். அது எங்களது பங்களிப்பு ஆகும். எதிர்க்கட்சிகள் வசதியாக இருப்பதை உணர்வதையும், அவர்கள் மதிக்கப்படுவதையும் உறுதி செய்வது எங்கள் பங்கு ஆகும். எதிர்க்கட்சிகள் இடையே சம அளவில் மரியாதை வேண்டும். அவர்கள் எங்களுக்கு மரியாதை தர வேண்டும். நாங்களும் பதிலுக்குத் திரும்ப மரியாதை தருவோம்

இந்தியா வாடகையைத் தேடுகிற நாடாக இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக உற்பத்தி நாடாக மாற வேண்டும். குழந்தைகள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப, பறக்க சிறகுகள் தருகிற வகையிலான கல்விக் கொள்கை வேண்டும். மருத்துவம், பொறியியல், ஆட்சிப்பணி, சட்டம் ஆகியவற்றைத் தாண்டியும் பார்க்க வேண்டும். தெளிவான வெளியுறவு கொள்கை வேண்டும். ஒன்றிய அரசால் தற்போது பின்பற்றப் படுகிற குழப்பமான கொள்கை கூடாது. மாபெரும் பொருளாதார சமத்துவம் வேண்டும். 

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment