Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒற்றைப் பத்தி
January 20, 2023 • Viduthalai

யார் துவேஷிகள்?

கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்?

பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி.

'துக்ளக்', 18.1.2023, 

பக்கம் 32

நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் இடம் உண்டு என்று ஆனபிறகு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது பற்றிப் புலம்புவானேன்?

உண்மையிலேயே துவேஷிப்பவர்கள் யார்? பிறக்கும்போதே பிராமணன் என்றும், சத்திரியன் என்றும், வைசியன் என்றும், சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் வகைப்படுத்தியது எந்த மதம்? ஹிந்து மதம்தானே!

இந்த ஏற்பாட்டை பிர்மா என்ற கடவுள்தான் செய்தார் என்பதும் ஹிந்து மதம்தானே!

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று 'பகவான்' கிருஷ்ணன் சொன்னதாகக் கீதை கூறுகிறதே! (அத்தியாயம் 9, சுலோகம் 32).

இதில் துவேஷிப்பவர்கள் யார்? இவர்கள் எல்லாம் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்களாம்; குருமூர்த்தி கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் புண்ணிய யோனியிலிருந்து பிறந்தவர்களா? சீ... எவ்வளவுப் பெரிய ஆபாசக் கூட்டம் இது!

கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், முன்யோசனையும் இல்லையே! பகுத்தறிவோடு சிந்தித்துப் பேசுபவர்களை 'துவேஷிகள்' என்று தூற்றுவது யோக்கியமான செயலா?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்துகொண்டு, மற்றவர்களைப் பார்த்துத் 'துவேஷிகள், துவேஷிகள் என்பார்கள்' என்று லாலா லஜபதி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

குருமூர்த்தி கூட்டத்திற்கு ஒன்று! முதலில் உங்கள் முதுகில் தொங்கும் பூணூலைத் 'தூ' என்று சொல்லி தூக்கி எறியுங்கள் பார்க்கலாம்!

தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்கள்) என்று காட்டுவதுதானே அந்தச் சின்னம்! துவேஷம்!

பார்ப்பனப் பெண்களுக்குக்கூடப் பூணூல் அணியும் உரிமை கிடையாதே! அவர்களையும் சேர்த்து விபச்சார தோஷமுடையவர்கள் என்று உங்கள் மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 9, சுலோகம் 19) சொல்லவில்லையா?

பெற்ற தாயையே விபச்சார தோஷமுள்ளவர் என்று கூறும் கேடுகெட்ட கூட்டம் யாரைப் பார்த்து துவேஷிகள் என்று கூறுவது?

 -  மயிலாடன்


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn