Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் வெளியிட்ட குற்றப் பத்திரிகை
January 22, 2023 • Viduthalai

புதுடில்லி, ஜன.22 மோடி அரசு மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள் ளது. 

ஒன்றியத்தில்  ஆளும் பா.ஜ.க. அரசு மீது எதிர்க்கட்சி யான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்த நிலையில், 'பிரஷ்ட் ஜூம்லா பார்ட்டி' (ஊழல் ஜூம்லா கட்சி) என்ற தலைப்பில், ஒன்றிய பிரதமர் மோடி தலைமையில் அமைந் துள்ள அரசின்மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி நேற்று (21.1.2023) வெளியிட்டது. 

இதை வெளியிட்டு காங் கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோ பால் கூறுகையில், "மோடி அரசின் தவறான ஆட்சி குறித்து நாங்கள் இன்றைக்கு குற்றப்பத்திரிகை வெளியிட்டு இருக்கிறோம். தேவைப்பட் டால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் மீதான குற்றப்பத் திரிகையை மாநில காங்கிரஸ் கமிட்டிகள் வெளியிடும்" என குறிப்பிட்டார். 

குற்றப்பத்திரிகையில் கூறி இருப்பது என்ன? 

இந்த குற்றப்பத்திரிகை 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதில் 'குச் கா சாத' (ஒரு சிலரின் நலனுக்காக) என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டும் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; 10 சதவீத பணக்காரர்கள், நாட்டின் 64 சதவீத செல்வ வளத்தைக் கொண்டுள்ளனர்; துறைமுகங் களும், விமான நிலையங்களும் பிரதமரின் நெருங்கிய நண் பர்களுக்கு பரிசுகளாக தாரை வார்க்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

2-ஆவதாக 'கூத் கா விகாஸ்' (சுய வளர்ச்சி) என்ற பிரிவில், பா.ஜ.க. தன்முனைப்பு பிர சாரத்துக்காக கோடிக்கணக் கில் செலவு செய்கிறது, நெருக் கமானவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள் ளது. 3-ஆவது பிரிவில், வேலையில்லா திண்டாட்டம், உணவு பாதுகாப்பு, பெண்கள் பாது காப்பு, விவசாயிகளின் துன் பங்கள், வெறுப்புணர்வு பேச் சுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்த்தல், பல்வேறு துறைகளில் இந்தி யாவின் பன்னாட்டு தர வரிசை குறியீடுகள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. 

ராகுல் நடைப் பயணம்

ராகுல் காந்தி மேற்கொண் டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இறுதிக்கட்டத் துக்கு வந்துள்ளது.  ஜம்முவுக் குள் 19-ஆம் தேதி நுழைந் துள்ளது. 25-ஆம் தேதி வரை ஜம்முவில் இருப்போம். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைப்பயணம் காஷ்மீரில் நடக்கும். 30-ஆம் தேதி  நிறைவு அடையும். இந்த நடைப் பயணத்தை மாபெரும் வெற்றி காணச் செய்ததற்காக நாங்கள் நாட்டின் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடைப்பயணம் நாட்டின் மாபெரும் இயக்கமாக பரிண மித்து இருக்கிறது." என்று அவர் கூறினார்.

"இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின் 2-ஆவது கட்ட மாக காங்கிரஸ் கட்சி 'ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்' என்ற பெயரில் (கைக்கு கை பிரச்சாரம்) மேற்கொள்ளும் இதற்கான சின்னத்தையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 26-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நடைப் பயணத்தின்போது, இந்திய ஒற்றுமை நடைப் பயணம் பற்றி ராகுல் காந்தி எழுதிய கடிதத்தையும், மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள குற்றப்பத்திரிகை யையும் மக்களுக்கு விநியோ கிப்போம்" என்று கே.சி.வேணு கோபால் ஏற்கெனவே குறிப் பிட்டிருந்தது நினைவுகூரத் தக்கது. 

"ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்" நடைப் பயணத்தின் இலக்கு, மோடி அரசின் தோல்வியை மக்களி டம் எடுத்துச் செல்வதுதான். இது 100 சதவீதம் அரசியல் பிரச்சார இயக்கம்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn