ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் தற்கொலை: ஆளுநர் மனம் இரங்குமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் தற்கொலை: ஆளுநர் மனம் இரங்குமா?

கோவை, ஜன. 13  ஆன்லைன் சூதாட் டத்தில் பணத்தை இழந்த பொறி யாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29) பொறியாளராக உள்ளார்.  இவர் ஆன்லைனில் சூதாட் டம் விளையாடி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது எனவும், நாளடை வில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில் அதன்மூலம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை இழந்துள்ளார். எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழக்க நேரிட்டது. இதன் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த 12-ஆம் தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அறையில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட விடுதி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து காட்டூர்காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர்  நிகழ்வு  இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது அறையில் இருந்து சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ஆன் லைனில் விளையாடுவ தற்காக நண் பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக வும், ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும் எனக் குறிப்பிட்டு  அதில் எழுதி இருந்தார். ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்ப தையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதுகுறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment