Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்
January 20, 2023 • Viduthalai

பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன்  பெண்ணுரிமை குறித்த சில நூல்கள் குறித்து வலை தளம் ஒன்றில் பேசியது.

1. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

“இந்த ஆண்டு புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும் இறுதித் தருவாயில் பன்னாட்டுப்  புத்தகக் காட்சியாக நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் வாசகர்களுக்கு நான் 5 புத்த கங்களைப் பரிந்துரை செய்ய வேண்டுமென எண்ணுகிறேன். முதலில் நான் பரிந்துரை செய்வது தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ’பெண் ஏன் அடிமையானாள்’. இதை தந்தை பெரியார் அவர்கள் 1934-இல் எழுதினார். இன்றளவும் அந்தப் புத்தகத்தின் தேவை நம் சமூகத்திற்கு இருக்கிறது என எண்ணுகிறேன். சந்திக்கும் கல்லூரி மாணவியரிடம் நான் பரிந்துரைக்கும் முக்கியமான நூலாக இது இருக்கும். ஏனெனில் இன்றைக்குக்கூட நாம் பேசத் தயங்கும் பல விடயங்களை அன்றே உடைத்துப் பேசியுள்ளார் தந்தை பெரியார்.

குறிப்பாக கற்பு என்பது இருந்தால் அது இரு பாலினருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு பாலினத்தவர்களுக்கு மட்டும், குறிப்பாகப் பெண்களுக்கு மட்டும் இருக்கிறது, அவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைச் சாடியுள்ளார். மேலும் சொத்துரிமை என்பதும் இருபாலினத்தினருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். அவர் பேசிப் பல ஆண்டுகள் கழித்துதான் சட்டமே இயற்றப்பட்டது. அது இன்றைக்கும் சமூக அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதும் கேள்விக் குறிதான்.

அதே போல அன்றைக்கே மறுமணம் பற்றியும் பேசியுள்ளார். பாலியல் தொழிலாளர்கள் என்று வரும் போது, பல பெண்ணியவாதிகளுக்கு முன்பே பெரியார் இதைப் பற்றிப் பேசியுள்ளார். நீதி மற்றும் சமத்துவம் எவ்வாறு வீட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இப்புத்தகத்தில் பேசியுள்ளார். ஆகவே இப்புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்கிறேன்.

2. ஜாதியற்றவளின் குரல் - ஜெயராணி  - எதிர் வெளியீடு 

இந்திய இதழியலில் மிக முக்கியமான குறியீடாக ஜெயராணி எழுதிய ‘ஜாதியற்றவளின் குரல்’ என்னும் நூலினைச் சொல்வேன். வெகுஜன ஊடகத்தில் இருந்துகொண்டே மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தவர் ஜெயராணி. அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அக்கட்டுரைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பை மீட்கக் கூடியதாகவே இருக்கின்றன.

குறிப்பாகச் சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்படுகிற புதிரை வண்ணார் சமூகம் குறித்துப் பேசியுள்ளன. இப்புத்தகம் இன்னும் திறக்கப்படாத பல கதவுகளை, பல ஜன்னல்களை திறக்கக்கூடியது. ஆகவே வாசகர்கள் இந்நூலினை வாசிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

3. தெய்வமே சாட்சி - ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்  

தெய்வமே சாட்சி எனும் நூல் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பல ஆண்டுகள் பல இடங்களுக்குச் சென்று எழுதித் தொகுத்த  நூலாகும்; வரலாறு என்பது ஆண்களின் வரலாறாகவே உள்ளது. பெண்களின் வரலாறு என்பது குறைவாகவே உள்ளது. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இருந்தும் அக்காலத்தில் இருந்த பெண்களின் கதைகள் இன்று நம் முன் சிலைகளாக உள்ளன.

உதாரணத்துக்குக் குழந்தை வரம் வேண்டி நடந்து வந்த பெண், இறந்து சிலையான மலட்டம்மன் கதை, ஜாதி மாறித் திருமணம் செய்ததால் கொல்லப்பட்டு பின் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதை எனப் பல கதைகள் உள்ளன. இவை அனைத்தையும் சேகரித்துக் கள ஆய்வு செய்து பெண்களின் மீது தொன்மத்தில் வன்முறை எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதை விரிவாகக் கூறியுள்ளார். ஆகவே வாசகர்கள் சமூகத்தின் இன்னொரு நிலையைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும் என்பதால் இந்நூலினை நான் பரிந்துரை செய்கிறேன்."

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற ஒரு கருத்தாடல் உலவி வருகிறது. அதே போல பொதுக் கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந்து வருகிறது என்ற கருத்தும் பேசு பொருளாகியுள்ளது.

இவற்றை எல்லாம் கடந்து தந்தை பெரியார் எழுதிய  நூல்களையும் தந்தை பெரியார் குறித்த நூல்களையும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் வாங்குவது எதிர்கால நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது.

பொதுக் கூட்டங்கள் என்று பார்த்தாலும் திராவிடர் கழகம் முன் வரிசையாக நிற்கிறது. முதற்கட்ட சுற்றுப் பயணத்தை முடித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், இரண்டாவது கட்டமாக அறிஞர் அண்ணா நினைவு நாளில் பிப்ரவரி 3இல் தொடங்கி மார்ச்சு 10இல் நிறைவு செய்கிறார்.

அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும் அவர் கண்ட இயக்கமும் மக்கள் மத்தியில் வேரூன்றியே நிற்கிறது. இது காலத்தின் கட்டாயமாகும்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn