சனாதனத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தந்தை பெரியாரும் - திராவிடர் இயக்கமும் மக்களுக்கு பெற்றுத்தந்த உரிமைகள், மேலும் பல வரலாற்று உண்மைகளை விளக்கும் துண்டறிக்கைகளை குமரி மாவட்ட பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் குமரி மாவட்ட பொறுப்பாளர்கள். கன்னியாகுமரியில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், தொழிலாளரணி கழக அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், ச.ச.மணிமேகலை உட்பட பலரும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய தொண்டுகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.
Thursday, January 5, 2023
வரலாற்று உண்மைகள் - துண்டறிக்கை பிரச்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment