புரிந்துகொள்வீர் சங் பரிவார்களை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

புரிந்துகொள்வீர் சங் பரிவார்களை!

 1. அதிமுக ஒற்றுமையாக இருந்தால் நாடு செழிப்பாக இருக்குமாம்! தமிழிசை சவுந்திரராஜன் ‘ஜோசியம்’ கூறுகிறார். 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்திரராஜன், சென்னையில்  தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ”தேசியம் போற்றிய திராவிடத் தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாடு செழிப்பாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்” என்று அவர் கூறினார்.

2. பெண் விவகாரத்தில் வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- பா.ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் கைது

நெல்லையில் மற்றொருவரின் மனைவியை தனதாக்கிக்கொள்ள பாஜக பிரமுகர்கள் முட்டிமோதிக்கொண்டு ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்குச் சென்று விட்டனர். இதைத் தட்டிக்கேட்டவர்கள் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசி உள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா முக்கிய பதவியில் உள்ள பூலித்துரை என்பவருக்கும்,  அய்யப்பன் என்பவருக்கும் பெண் விவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பூலித்துரை நேற்று இரவு பரோட்டா கடைக்கு சாப்பிடச் சென்ற அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment