பிபிசி ஆவண படத்திற்கு தடையா? : சரத்பவார் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

பிபிசி ஆவண படத்திற்கு தடையா? : சரத்பவார் கண்டனம்


மும்பை, ஜன.29
பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை தடை செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தின் முதலமைச்சர் இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவ ணப்படத்தை வெளியிட்டது. இதற்கு பா.ஜனதா கட்சி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் கூறியதாவது:-  பி.பி.சி. ஊடக குழுவால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை என்பது ஜன நாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். கடந்த சில நாட்களாக இதுபோன்ற நிகழ்வு நடந்து வருகிறது. மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒரு போதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஆனால் ஒன்றிய அரசு இந்த நடைப்பயணத்திற்கு மாறுபட்ட கோணத்தில் சாயம் பூச முயன்றது. சாதாரண மக்களின் பெரும் ஆதரவு காரணமாக இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

 இதேபோல ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவியில் இருந்து விலக விரும்புவதாக கூறியது குறித்து கேட் கப்பட்ட கேள்விக்கு சரத்பவார் பதில ளித்து கூறுகையில், "மராட்டியத்தை சேர்ந்த பெரிய தலைவர்களான சத்ரபதி சிவாஜி மற்றும் பலர் குறித்து சர்ச் சைக்குரிய வகையில் பேசிய நபரிடம் இருந்து மராட்டிய மாநிலமும், மக் களும் விடுபடுவது நல்ல விடயம். அடுத்து யார் ஆளுநராக வருவார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்றார்.


No comments:

Post a Comment