பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி சாதனை

திருச்சி, ஜன. 12- இந்திய மருந்தியல் சங்கம்  (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சுப் போட்டியின் அரை இறுதி சுற்று ஆதித்யா பெங்களுர் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ABIPER) 7.1.2023 அன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நமது பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி எம். மஞ்சுசிறீ உட்பட 9 போட்டியா ளர்கள் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளனர்.  மாணவி மஞ்சுசிறீக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பட்டப்படிப்பு முடித்தவு டன் பன்னாட்டு மருந்தி யல் நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பும் அளிக் கப்பட்டுள்ளது. நாக்பூர் பல்கலைக்கழகத்தில்  இம் மாதம் 20,- 22 தேதிகளில் நடக்கவிருக்கும்  அகில இந்திய மாநாட்டில் (Indian Pharmaceutical Congress)இறுதி சுற்று நடை பெற உள்ளது.

இம்மாணவி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்று மேலும் சேலம் விநாயகா மிஷன் பல் கலைக்கழகத்தின் மருந் தியல் துறையில்  டிசம்பர் 15, 2022 அன்று நடை பெற்ற போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள மாணவிக்கு முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment