குடியாத்தத்தில் தந்தைபெரியார் நினைவு நாள் ந. இரத்தினம் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

குடியாத்தத்தில் தந்தைபெரியார் நினைவு நாள் ந. இரத்தினம் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

குடியாத்தம், ஜன. 2- தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவேந் தல்  மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் இரா. அன்பரசனின் தந்தை ந.இரத்தினம் அவர்களின்  7ஆம் ஆண்டு படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு அன்புமொழி இல்லத் தின் சார்பில் குடியாத்தம் பெரியார் அரங்கத்தில் 24.12.2022 காலை 11 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார் தலைமை யில் நடைபெற்றது.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் ந.தேன் மொழி வரவேற்புரை ஆற்றினார். தே.அ.புவிய ரசு, க.சவு.இந்துஜா, தே. அ.ஓவியா, இ. மோகன் ராஜ், ஆகியோர் முன்னி லையில் ச.கலைமணி வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் தந்தை பெரியார் அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். திரு ந.ரத்தினம் படத்தை அவ ரது இணையர் லட்சுமி அம்மாள் திறந்து வைத் தார்.

வேலூர் மண்டல தலைவர் பி.சடகோபன் தொடக்க உரையாற்றி னார். பெரியார் மருத்து வர் அணி செயலாளர் மருத்துவர் பழ ஜெகன் பாபு உரையாற்றினார். சவுந்தர்ராஜன் குடியாத் தம் நகர மன்ற தலைவர், த.பாரி திமுக கழக பேச் சாளர், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதா சன் ஆகியோர் உரையாற் றினர். கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன்  சிறப்புரையாற்றி னார். வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் குடி யாத்தம் நகர மன்ற துணைத்தலைவர் வி. பூங் கொடி, இந்திராகாந்தி, நகர தலைவர் சாந்த குமார், விமலா, நகர அமைப்பாளர் வி. மோகன, அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர் போ.ரவீந்திரன் மற்றும் மணியம்மையார் சிந்த னைகளம் தோழர்கள் ப.க .பாலகி ருஷ்ணன், குமாரி, வி.சி.க.விவேக், தி. மு.க.வைச் சேர்ந்த தோழர் கள், அப்பகுதி வாழ்தோழர் கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment