இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.5ஆம் தேதி வெளியீடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.5ஆம் தேதி வெளியீடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஜன. 2- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், இறந்தவர் பெயர்கள் நீக்கம் இவற்றுக்காக ஆதார் எண்ணை இணைக் கும்படி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக 6-பி என்ற படிவம் வெளியிடப்பட்டது. அதை பூர்த்தி செய்து, வீட்டுக்கு வரும் வாக்காளர் பதிவு அலு வலரிடம் வழங்கலாம் என்றும், தேசிய வாக்காளர் பதிவு இணை யதளத்தின் மூலம் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பிக் கலாம் என்றும் அறிவிக்கப்பட் டது. அதன்படி, வாக்காளர் பட்டியலுடன், ஆதார் இணைப் புக்கு வாக்காளர்கள் விண்ணப் பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறிய தாவது: ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி 4 மாதம் முடிவுறும் நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 6.18 கோடி வாக்காளர்களில் 61 விழுக்காட் டினர் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிக பட்சமாக அரியலூரில் 91.4 விழுக் காடு, கள்ளக்குறிச்சியில் 89.03 விழுக்காடு, தருமபுரியில் 81.62 விழுக்காட்டினர் விண்ணப் பித்துள்ளனர். குறைந்தபட்ச மாக சென்னையில் 30.4 விழுக் காட்டினர் விண்ணப்பித்துள்ள னர். மார்ச் 31ஆம் தேதி வரை இப்பணிகள் தொடர்ந்து நடை பெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன.5ஆம் தேதி வெளியிடப் பட உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவ டைந்துள்ளன. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி யில் ஆலோசனை நடத்த உள் ளேன். 

-இவ்வாறு அவர் தெரிவித் தார்.

பிஜி தீவில் தேர்தல் பணி:

இந்தியர்கள் அதிகம் வாழும் பிஜி தீவில் அங்குள்ள அரசு சார்பில் டிச.14ஆம் தேதி தேர் தல் நடைபெற்றது. இதற்காக பன் னாட்டு அளவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனே சியா உள் ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்த 90 பார்வையா ளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

இதில் இந்தியா சார்பில் சத்யபிரத சாகு, தேர்தல் ஆணை யத்தின் மூத்த துணை தேர்தல் அதிகாரி தர்மேந்திர சர்மா, பிஜய் பாண்டே ஆகியோர் சென்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘பிஜி தீவில் நடைபெற்ற தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. 

வாக்குச்சீட்டு முறை பின்பற் றப்பட்டாலும், வாக்குச் சாவடி யிலும், அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மய்யத்தி லும் என இரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment