ரூபாய் 500, 1000 பண மதிப்பு இழப்பு நடவடிக்கை செல்லுமாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

ரூபாய் 500, 1000 பண மதிப்பு இழப்பு நடவடிக்கை செல்லுமாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு

புதுடில்லி, ஜன.3 பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.   பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016 ஆ-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண்  உள்ளிட்ட 57 பேர் உச்சநீதிமன்றத்தில்  ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம்  இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர்  நேற்று (2.1.2023) தீர்ப்பு அளித்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்பப் பெற முடியாது எனக் கூறி எதிரான மனுக்களை தள்ளுபடி செய் தனர். இதில், பணமதிப்பிழப்பு நட வடிக்கை செல்லும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அவர்கள் வழங்கிய தீர்ப்பில் ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப் பது பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசின் செயல் பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய அரசை குறை கூற இயலாது. ஒன்றிய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பணமதிப்பிழப்பு நடவடிக் கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்.ஒன்றிய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்த நடவடிக் கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானது அல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்க ளுக்கு திருப்தி தருகிறது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது.

ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நட வடிக்கையை ஏனோதானோ வென்று உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் ஒன்றிய குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது. போதுமான ஆய்வு களை செய்த பிறகுதான் ஒன்றிய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பண மதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க இயலாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும் தீர்ப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

தனி நீதிபதி தீர்ப்பு

இந்நிலையில், பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா வழங்கிய தீர்ப்பில் ரிசர்வ் வங்கி சட்ட விதிகளின்படி, ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக் கையை மேற்கொள்ள முடியாது. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக் கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசரச் சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம். நாடாளுமன்றம் என்பது இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மய்யப்புள்ளியான நாடா ளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெ டுக்க முடியாது எனத் தெரிவித்தார்


No comments:

Post a Comment