அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். அதன்படி அறுவடைக்கு தயாரான காச்சில் கிழங்கு வெட்டி எடுக்கும் பணியில் பிர தீஸ் ஈடுபட்டார். அப்போது, கிழங்கு பூமிக்கு அடியில் ஆழமாக சென்றதை கண்டார். சுமார் 8 அடி ஆழத்தில் பல பிரிவு களாக சென்றிருந்த கிழங்கு முழுமையாக உடையா மல் பிரதீஸ் அறுவடை செய்தார். அதன் எடை 45 கிலோ இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமாக இந்த வகையை சேர்ந்த கிழங்கு ஒன்று அதிகபட்சமாக 20 கிலோ இருக்கும். ஆனால் இந்த கிழங்கு 2 மடங்கு எடையில் உள்ளது. இந்த கிழங்கை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த் துச் சென்றனர்.
Wednesday, January 11, 2023
45 கிலோவில் காச்சில் கிழங்கு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment