தொல்.திருமாவளவன் அறிவிப்பு
சென்னை,ஜன.10- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஜனவரி 13-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலை வரும் மக்களவை உறுப்பின ருமான தொல். திருமாவள வன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநரின் நடவடிக் கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தி யுள்ளது. தேசிய கீதம் இசைப் பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளி யேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசிய கீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.
எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற் றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கெ னவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக் குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment