அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க புதிய கருவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க புதிய கருவி

சென்னை,டிச.14.- கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை சென்னை அய்அய்டி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி கடந்த நவம்பர் மாதம் வெற்றிகரமாக பரிசோதிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தூத்துக் குடி கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதியில் 20 மீட்டர் ஆழத்தில் இக்கருவி தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இதன்மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் கடல் அலைகளில் இருந்து 1மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி புதுப்பிக் கத்தக்க ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு இலக்குகளை அடைய உதவும் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment