நாகர்கோவில், டிச. 12- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார் பாக பகுத்தறிவு விழிப் புணர்வு துண்டறிக்கை களை பொதுமக்களிடம் வழங்கி கழகத் தோழர்கள் பரப்புரை செய்தனர்.
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பங்கேற்றனர். கழக பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன் இந்த பரப்புரையை தொடங்கி வைத்தார்
மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பா.பொன்னுராசன், தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கரு ணாநிதி, நாகர்கோவில் மாநகர துணைத்தலைவர் கவிஞர் ஹ. செய்க்முகமது திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா. கோகுல், தோழர் கள் மு.குமரிச் செல்வர், ச.ச.மணிமேகலை உட்பட பலரும் கலந்து கொண்ட னர். தந்தை பெரியாரு டைய கருத்துக்கள், தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களு டைய கருத்துக்கள் அடங் கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமு டன் வாங்கி படித்தனர்
No comments:
Post a Comment