உச்சநீதிமன்றம் உத்தரவு ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பிரச்சினை தீரும் வரை ஆண்களுக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

உச்சநீதிமன்றம் உத்தரவு ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பிரச்சினை தீரும் வரை ஆண்களுக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது!

புதுடில்லி, டிச.11-  ராணுவ பெண் அதிகாரி களுக்கு பதவி  உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இந்தப் பிரச்சினை தீரும் வரை, அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண்  அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்துமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

ராணுவத்தைப் பொறுத்தவரை அதிக பாகுபாடுகள், பாரபட்சங்கள் பார்க்கப்படு வதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப் பட்டு வருகிறது. ராணுவத்தில் ஆண்கள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பெண் களின் எண்ணிக்கை என்பது மிகக்குறைவே. அதுவும் உயர் பதவிகளில் பார்ப்பது அரிதானது. 

இந்நிலையில், “ஆண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், பெண் அதி காரிகள் பதவி உயர்வு இதில் பரிசீலிக்கப் படுவது இல்லை” எனக் கூறி இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். 

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வு முன்பு கடந்த 9.12.2022 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெண் அதிகாரிகள் சார்பில் மூத்த வழக்குரைஞர் வி. மோகனா ஆஜரானார். 

 “2022  நவம்பரில் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட கடிதத்தின்படி,சுமார் 249 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், அதிகாரிகளால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு வாரிய ஷிஙி3 மற்றும் ஷிஙி2 ஆகியவற்றில் பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு  பரிசீலிக்கப்படவில்லை'' என்று அவர் வாதிட்டார்.  பெண் ராணுவ வீரர்களின் கீழ் பயிற்சி பெற்ற இளையவர்கள் அனை வரும், அதிகாரிகளாகும்போது, பெண்களுக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு வழங்கப்பட வில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ தலைமையகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய்  ஜெயின் மற்றும் அட்வகேட் கர்னல் பாலசுப்ரமணியம் ஆகியோர், நிதி அமைச் சகம் அண்மையில் 150 காலியிடங்களுக்கு அனுமதி வழங்கியதாகவும், அதற்கான தேர்வு வாரியங்கள்மூலம் 2023 ஜனவரிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும்  நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

ஆனால், அரசுத்  தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. “பெண் அதிகாரி களிடம் நீங்கள் (பாதுகாப்பு அமைச்சகம்) நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். நீங்கள் உங்கள் நியமன யுக்தியை ஒழுங்கமைக்க வேண்டும். பணி என்பது அனைவருக்கும் சமம். அதில் பாலின அடிப்படையில் வேறுபாடு காட்டக் கூடாது. பெண் அதிகாரிகளின் பிரச்சினை பரிசீலிக்கப்படும் வரை அக்டோபரில் நடத்தப் பட்ட ஷிஙி3 இன் கீழ் பதவி  உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

மேலும், தற்போதைய காலிப் பணி யிடங்களுக்கு பெண் அதிகாரிகள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசார ணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment