Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
நெல்லை காவல்துறை கண்காணிப்பாளரை கைது செய்து ஆஜர்படுத்த தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு
December 04, 2022 • Viduthalai

சென்னை, டிச.4- வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தால் நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று தென்மண் டல அய்.ஜி.க்கு மாநில தாழ்த் தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம். இவர், தனக்கு சொந்தமான நிலத்தை சிலர். ஆக்ரமித்து வேலி அமைத்துள்ளதாகவும், தன்னை அந்த நிலத்துக்குள் செல்ல விடாமல் தடுப்பதாக வும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்தார். சட்டத்துக்கு புறம்பாக நிலத் தின் ஒரு பகுதியை போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், இதுசம்பந்தமாக காவல் துறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் புகாரில் கூறியிருந்தார். 

இந்த புகாரை விசா ரித்த  ஆணையம், மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கையை அறிக்கையாக தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளருக்கு கடந்த 10.6.2022 அன்று உத்தரவிட் டது. இதன்பின்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் கால அவகா சம் வழங்கியது. இருந்தபோதிலும் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வில்லை. இதைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜராக ஆணை யம் உத்தரவிட்டது.ஆனால், அவர் ஆஜராகவில்லை.

 இந்தநிலையில் வழக்கு விசாரணையை கடந்த 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த ஆணை யம், அன்றைய தினம்  அவர் விசாரணைக்காக கண் டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ஆனாலும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஜராக வில்லை. அவருக்கு பதிலாக கூடுதல் காவல்துறை கண் காணிப்பாளர் மாரிராஜன் ஆஜரா னார்.

இதை ஏற்க மறுத்த ஆணை யம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: "நெல்லை காவல் துறை கண்காணிப்பாள ரின்இந்த செயல் ஆணையத் தின் உத்தரவு தம்மை கட்டுப்ப டுத்தாது என்றும், ஆணையத் தில் நேரில் ஆஜராவது தனது தகு திக்கு குறைவானது என கருது வது போன்று இருக்கிறது.  

எனவே, நெல்லை காவல் துறை கண்காணிப்பாளர் சரவணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய பிடிவாரண்டு பிறப் பிக்கப்படுகிறது. நெல்லை காவல்துறை கண்காணிப் பாளரை கைது செய்து வருகிற 28-ஆம் தேதி ஆஜர்படுத்த தென்மண்டல அய்.ஜி.க்கு உத்தரவிடப்படுகிறது.

அபராத தொகையை நெல்லை மாவட்ட ஆட்சியர் வசூலித்து அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn