இந்தியாவில் 210 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

இந்தியாவில் 210 பேருக்கு கரோனா

புதுடில்லி, டிச .10   இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 210 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய் யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,74,649 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண் ணிக்கை 4,047 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை 5,30,654 ஆக உயர்ந் துள்ளது. கரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,948 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.96 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளது. இந்த தகவலை ஒன்றிய சுகாதார அமைச் சகம் வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்   3 ஆண்கள், 5 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2 பேர் உள்பட மொத்தம் 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தேனி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 32 மாவட் டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால்  எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.


No comments:

Post a Comment