கருநாடகாவில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரை விரட்டியடித்த கிராம மக்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

கருநாடகாவில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரை விரட்டியடித்த கிராம மக்கள்!

 சிக்கமகளூரு, நவ. 23 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள ஹுல் லேமனே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், யானை தாக்கி உயிரிழந்தார். அந்த பகுதியில் யானைகளால் பொதுமக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதை தடுக்கக் கோரி அக்கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. 

இந்த நிலையில், யானை தாக்கி   பெண் ஒருவர் உயிரி ழந்தார். பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹுல்லேமனே கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் அங்கு சென்று பார்த்து  கொந்தளித்துபோய் இருந்தனர். இந்த நிலையில், முதிகெரே பாஜக சட்டமன்ற உறுப்பினர் குமாரசாமி அங்கு  ஆறுதல் கூறச்சென்றார். இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், அவரிடம் யானையின் தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே பல முறை கூறியும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சரியான முறையில்  பதில ளிக்கவில்லை. இதையடுத்து,  அவர்மீது கிராம மக்கள்  தாக்குதல் நடத்தியதுடன், அவரது வேட்டி, சட்டையை கிழித்து விரட்டியடித்தனர். இந்த நிகழ்வு குறித்து கேள்விப்பட்ட அருகே உள்ள காவல்துறையினர், அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான ஒளிப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்துக் கூறிய அந்த கிராம மக்கள்,   யானை தாக்குதலுக்கு சட்டமன்ற உறுப்பினர் சரியாக பதிலளிக்கவில்லை என  குற்றம் சாட்டினர். யானை தாக் குதல் காரணமாக பெண் உயிரி ழந்த விவகாரத்தில் கொந்தளித் திருந்த கிராம மக்கள், அங்கு சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் முறையற்ற பதிலால் கோப மடைந்து, அவரது  வேட்டி, சட் டையை கிழித்து விரட்டியத்தனர். இது கருநாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment