Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
சீனாவில் கரோனா கட்டுப்பாடு ஊழியர்கள் தப்பியோட்டம்!
November 02, 2022 • Viduthalai

பெய்ஜிங், நவ. 2- சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து அய்போன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவு சமூக வலைதளங் களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக் டொனல் ட்விட்டரில் கூறியுள்ள தாவது:

சீனாவில் செங்சூ நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ள தையடுத்து பொதுமுடக்கம் அறி விக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஆப்பிளின் அய்போன் தயாரிக்கும் பாக்ஸ்கானின் பெரிய ஆலை அமைந்துள்ளது.

அந்த ஆலையில் பணிபுரிந்த ஏராளமானோர் கரோனா கட்டுப் பாடுகளுக்கு அஞ்சி வேலியைத் தாண்டி குதித்து தப்பியோடினர். இதில் பெண்களும் அடங்குவர். கரோனா பொதுமுடக்கம் காரண மாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதை யடுத்து, பாக்ஸ்கான் தொழிலாளர் கள் 100 கி.மீ.க்கும் அப்பால் இருக் கும் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்லத் தொடங்கியுள்ளனர். உலகின் மொத்த அய்போன் உற்பத்தியில் 50 சதவீதம் செங்சூவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில்தான் தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 3,00,000 தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.

அதில், பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் தனி மைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிருக்கு பயந்து பலர் ஆலையிலிருந்து வெளியேறுவ தற்கு ஆபத்தான முறையில் வேலியை கடந்து செல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வெளி யேறுபவர்கள் சாலைகளிலும், வயல்வெளிகளிலும், மலைகளிலும் தஞ்சமடைந்து மெதுவாக ஊரை நோக்கி செல்வதை காட்சிப் பதிவு கள் சுட்டிக் காட்டுகின்றன.

ஃபாக்ஸ்கானிலிருந்து வெளி யேறி வரும் தொழிலாளர்களுக்கு உதவ நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் இலவச விநியோக நிலையங்களை அமைத் திருப்பதையும் அந்த காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலை யில், அரசு அல்லது பாக்ஸ்கான் உதவியை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அருகில் உள்ள பொது மக்களின் கனிவான கருணையை மட்டுமே அவர்கள் நம்ப முடியும்.

இருப்பினும், பாக்ஸ்கான் ஆலை யில் எத்தனை தொழிலாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள னர் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்பட வில்லை. இவ்வாறு பிபிசி செய்தி யாளர் தெரிவித்துள்ளார்.

ஹெனான் மாகாண தலை நகரான செங்சூவில் கடந்த ஏழு நாள்களில் மட்டும் கரோனா பாதிப்பு 97-லிருந்து 167-ஆக உயர்ந் துள்ளது. கரோனாவை முற்றிலும் ஒழிக்க சீன அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் ஒரு கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நகரம் பகுதியளவு பொது முடக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn