ஆணவக் கொலை: மகளையே சுட்டுக் கொன்ற பெற்றோர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

ஆணவக் கொலை: மகளையே சுட்டுக் கொன்ற பெற்றோர்

மதுரா, நவ .23 உத்தரப்பிரதேசத் தில்   வேறு ஜாதி நபரை திருமணம் செய்த மகளை சுட்டுக் கொன்று, சூட்கேசில் வைத்து பெற்றோர் வீசிய அதிர்ச்சி நிகழ்வு நடை பெற்று  உள்ளது. 

 உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் ஒதுக்குப்புற பகுதியில் கடந்த 18-ஆம் தேதி சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்து உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அதனை கைப் பற்றினர். அந்த சூட்கேசுக்குள் 25 வயது இளம்பெண்ணின் உடல் இருந்தது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன. 

இதன்படி, உத்தரப்பிரதேசத் தின் கோரக்பூர் நகரில் பலூனி பகுதியில் வசித்து வந்தவர் நித் தேஷ் யாதவ். இவரது மகள் ஆயுஷி சவுத்ரி. நித்தேசுக்கு வேலை கிடைத்ததும் தலைநகர் டில்லிக்கு அவரது குடும்பம் புலம்பெயர்ந்து சென்றுள்ளது. தெற்கு டில்லியின் பாதர்பூர் பகுதியில் குடும்பத்துடன் நித் தேஷ் வசித்து வந்துள்ளார். டில்லியில் ஆயுஷி சவுத்ரி கணினி பிரிவில் பட்டப்படிப்பு (பி.சி.ஏ.) படித்து வந்துள்ளார். இந்நிலை யில், அந்த இளம்பெண்ணின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பெற்றோரிடம் எதுவும் கூறாமல் வெளியே சென்று சில நாட்கள் வரை   மகள் தங்கியிருந்தது நித்தேசுக்கு ஆத்திரத் ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர, சத்ரபால் என்ற வேறு ஜாதி நபரை திருமணம் செய்ததுடன், இரவு வரை வெளியே தங்கியதும் நித்தேசுக்கு கூடுதலாக கோபமூட்டியுள்ளது.  இதனைத் தொடர்ந்து, நித்தேஷ் தனது உரிமம் பெற்ற துப்பாக்கி யால் மகளை சுட்டுக் கொன்று  உடலை சூட்கேசில் வைத்து மதுரா நகரில் வீசி விட்டு சென் றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. சூட்கேசை பறிமுதல் செய்த பின்பு, அலை பேசியை ஆராய்ந்தும், சி.சி.டி.வி. காட்சிகள், சமூக ஊடகங்களை பயன்படுத்தியும், டில்லியில் சுவ ரொட்டிகளை ஒட்டியும் அவரை அடையாளம் காண காவல்துறையினர் முயற்சித்து உள்ளனர். இதன்பின் ஆயுஷியின் சகோதரர் மற்றும் தாயார் அவரை அடை யாளம் கண்டுள்ளனர். ஆயுஷி யின் முகம் மற்றும் தலையில் ரத்தம் தோய்ந்து இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் தென்பட்டு உள்ளன. 

இந்த நிலையில், உடலை அடையாளம் காட்ட வந்த நித்தேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வில் நித்தேஷ் தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன் றதும், உடலை அப்புறப்படுத்த அவரது மனைவி உதவி செய்ததும் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


No comments:

Post a Comment