Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிர்வாக இலட்சணம்! ரயிலில் தலையணை , போர்வை சுத்தமாக இல்லை - பயணிகள் போர்க் கொடி!
November 23, 2022 • Viduthalai

அரக்கோணம், நவ 23 தலையணை மற்றும் போர்வை சுத்தமாக இல்லாததால் விரைவு ரயிலை அரக்கோணத் தில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. 

சென்னை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில்  இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 12 மணி அளவில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயிலின் 6 ஏ.சி. பெட்டிகளில் இருந்த பயணிகள் போர்வை மற்றும் தலையணை சுத்தப் படுத்தப்படாமல் அழுக்காக இருந்ததாககவும், அதை மாற்றித் தருமா றும் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அரக்கோணத்தில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் கிடையாது. ஆனாலும் பயணிகள் ரெயிலை நிறுத்தி போர்வை மற்றும் தலையணை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறை ஆய்வாளர்   விஜயலட்சுமி ஆகியோர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த வசதி இந்த ரயில் நிலையத்தில் இல்லை என்றும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் புதிய போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn