‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

‘‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த முடிவு

விருதுநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் தீர்மானம்

விருதுநகர், நவ.1 விருதுநகர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம்  29.10.2022 சனி மாலை 6.30 மணிக்கு விருது நகர் நல்லதம்பி இல்லமான அகிலகத்தில்  நடைபெற்றது.

தலைமை வகித்த கழகப் பொதுச்செய லாளர் இரா.ஜெயக்குமார், முன்னிலை வகித்த மாநில அமைப்பு செயலாளர்கள் மதுரை வே.செல்வம் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கழகபிரச்சாரத் திட்டம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்க மாக உரையாற்றினார்கள்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ‘‘ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக கூட்டங்களை பொதுவெளியில்  நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்துவது எனவும்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருது நகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளை யம் உள்ளிட்ட  ஏழு சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவாளர்கள், தோழமை இயக்கத்தினர் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந்தித்து ‘விடுதலை' சந்தா இலக்கை முடித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ்வது எனவும்,  

டிசம்பர்-2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவிலும், 

டிசம்பர்-17 திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் குடும்பத்துடன்  பங் கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யபட்டது

திராவிட மாணவர் கழகம் சார்பில் நவம் பர் 4 ஆம் தேதி ஹிந்தி எதிர்ப்புப் போராட் டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாவட்ட செயலாளர் விடுதலை தி. ஆதவன், மாநில பக துணைத் தலைவர் நல்லதம்பி, ப.க புரவலர் ஆனந்தம், மாவட்ட ப.க அமைப் பாளர் சாத்தூர் அசோக், மண்டல இளை ஞரணி செயலாளர் அழகர், மாவட்ட ப.க தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளை ஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, இராஜ பாளையம் நகரத் தலைவர் பூ.சிவக்குமார், இராஜபாளையம் நகர செயலாளர் பாண்டி முருகன், திருத்தங்கல் நகர அமைப்பாளர் நல்லவன், திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் கோவிந்தன், அருப்புக்கோட்டை நகர செய லாளர் இராஜேந்திரன், அருப்புக்கோட்டை நகர இளைஞரணி தலைவர் திருவள்ளுவன், அருப்புக்கோட்டை முத்துக்குமார், அருப்புக் கோட்டை சுப்ரணியன், இராஜபாளையம் போத்திராஜ், மாவட்ட ப.க. துணைத் தலைவர் பாரத் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங் களை செயலாக்கிட உழைப்போம் என  தெரிவித்தனர்.

No comments:

Post a Comment