அண்மையில் (4.11.2022) நான் வெளியூர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அருகில் முன்பின் தெரியாத பயணி ஒருவர் என்னிடம் இருந்த 'விடுதலை' நாளேட்டை வாங்கிப் படித்துவிட்டு, 'விடுதலை' நாளேடு மிகச் சிறந்த பகுத்தறிவு நாளேடு என்றும், அந்நாளேடு எந்தக் கருத்தையும் ஆதாரத்துடனும், எடுத்துக் காட்டுகளுடனும் எடுத் துரைக்கும் நாளிதழ் என்றும் பெரு மிதத்துடன் கூறினார். 'விடுதலை' நாளிதழ் இளைஞர்களுக்கும் - மாணவர்களுக்கும் நல்வழி காட்டும் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அந் நாளேட்டை நல்லவண்ணம் சிறப்புடன் நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்றும் உவகையுடன் எடுத்துரைத்தார்.
மேற்கண்ட பயணியின் பெயர் திரு. நடராஜன், காஞ்சிபுரம். இவர் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும், நெற்றி நிறைய விபூதி - குங்குமமும் அணிந் திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்
No comments:
Post a Comment