தி.மு.க. அரசை சீர்குலைக்க ஆளுநரை பயன்படுத்தும் பா.ஜ.க. பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

தி.மு.க. அரசை சீர்குலைக்க ஆளுநரை பயன்படுத்தும் பா.ஜ.க. பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, நவ.19- திருவண்ணா மலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று (18.11.2022) நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் பேசியதாவது:

ஒற்றை கலாச்சாரம், ஒரே தலைமை எனும் இந்துத்துவா ராஜ்யத்தை நிறுவும் திட்டத்தை பாஜக அரசு மூலம் கடந்த 8 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் செயல்படுத்துகிறது. இந்துத்துவம், கார்ப்பரேட் மயமாக்குவதற்காக, தொழிலாளர்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட சமூக  பெண்கள், பழங்குடியினர் மீது கொடிய தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன.  தமிழ் நாட்டில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் காலூன்ற அனைத்து வித சூழ்ச்சிகளையும் செய்கிறது. அதற்காக, தி.மு.க. அரசை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது.

அதற்காக, ஆளுநரை பயன்படுத்துவது, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. தமிழ் நாட்டு மக்களிடம் சூழ்ச்சிகளை உருவாக்கி வலுப் பெறலாம் என நினைக்கிறது. மதவெறி கருத்துக்களை கிராமப்புற மக்களிடம் விதைக்கிறார்கள். மனுஸ்ருதியை, ஹிந்தியை, சமஸ்கிருதத்தை நாடு முழுவதும் திணிக்க தீவிரமாக பாஜக முயற்சிக்கிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 4 பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள்  வருவதற்கு அதிமுக காரணமாக இருந்தது. எனவே, பாஜகவுடன் இணைந்த கூட்டணிக் கட்சிகளையும் முறியடிக்க வேண்டும். 

-இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment