ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 61ஆவது தேசிய மருந்தியல் வார விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 61ஆவது தேசிய மருந்தியல் வார விழா

சென்னை, நவ. 29- இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து 61ஆவது தேசிய மருந்தியல் வார விழாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனை வளாகத்தில் நடத்தியது. 

 விழாவுக்கு தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநர் பி.வி.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மத்திய மருந்துகள் கட்டுபாட்டு துணை இயக்குனர் டாக்டர் பி.குமார் முன்னிலை வகித்தார். 

இந்த நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி மருந்தியல் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையின் குருதி வங்கியில் மருந்தியல் மாணவர்கள் ஆர்வமுடன் குருதிக் கொடை செய்தனர். இதையடுத்து 'உலகத்தின் மருந்தகம் இந்தியா' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 

மருந்தாளுனர்கள் மூலமாக பொதுமக்களுக்கு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டின் சிறந்த மருந்தாளுனர் கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment