லக்னோ, நவ.10 உத்தரப்பிர தேசத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப் பட்டார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5-இல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கட்டாவ்லி தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். விக்ரம் சிங்கிற்கு, 2013ஆ-ம் ஆண்டு நடந்த முசாபர் நகர் கலவர வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கட்டாவ்லி தொகுதிக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதே நாளில் ஏற்கெனவே முலாயம் சிங் யாதவின் மெயின்புரி எம்.பி. தொகுதி மற்றும் 5 சட்டமன்றத் தொகு திகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது. அதே நாளில்தான் குஜராத் சட்ட சபைக்கு 2ஆ-ம் கட்டத் தேர் தலும் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment