40 பேர் சிறப்பு துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

40 பேர் சிறப்பு துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வு

திருநெல்வேலி, நவ.4 நெல்லை மாவட்டத்தில் 40 பேர் சிறப்பு துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.  தமிழ்நாடு காவல்துறையில் 25 ஆண்டுகள் பணி பூர்த்தியான தலைமைக் காவலர்கள் சிறப்பு துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதே போல் நெல்லை மாவட்டத்தில் 40 பேருக்கு சிறப்பு துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளித்து நெல்லை சரக   காவல்துறை இணை இயக்குநர் பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற 40 பேரும்  நெல்லை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.


No comments:

Post a Comment