தமிழ்நாட்டில் புதிதாக 128 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 128 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, நவ.4 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 74, பெண்கள் 54 என மொத்தம் 128 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 33 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 92,454 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 53,097 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று மட்டும் 214 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,309 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

இந்தியாவில்..

 புதிதாக 1,321 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 16,098 பேர் நோய்த் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment