வில்லுப்பாட்டின் மூலம் தமிழ்க் கலை வளர்த்த வித்தகரும் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களது குழுவில் இருந்து தமிழ்த் தொண்டும், நாடகக் கலைஞராகவும் வில்லிசைக் கலைஞராகவும் இருந்த "கலைமாமணி" சுப்பு ஆறுமுகம் அவர்கள் (வயது 93) மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அவரது தமிழ்த் தொண்டு, கலைத் தொண்டினையும் பாராட்டி பெரியார் திடலில் சிறப்புச் செய்துள்ளோம். அவர் எவரிடத்திலும் பண்போடு பழகக் கூடிய சிறந்த நண்பர். அவரை இழந்து வாடும் அவரது மகள் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலையும், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.10.2022
No comments:
Post a Comment