திருவனந்தபுரம், அக். 26- கேரளாவில் ஆளுநருக் கும், மாநில அரசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆளு நரை திரும்ப பெற குடிய ரசுத் தலைவரிடம் வலி யுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வா கத்தில் ஆளுநர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நட வடிக்கைகள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழ கங்களின் துணைவேந்தர் களை பதவி விலக வலி யுறுத்தியும், விளக்கம் கேட்டும் ஆளுநர் ஆரிப் முகமது கான் நோட்டீசு அனுப்பினார்.
ஆளுநரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடைய செய் துள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் பாலக்காட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளுநருக்கான பணி களை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளி லும் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதி காரங்களை எல்லாம் கற் பனை செய்து கொண்டு, ஒரு சர்வாதிகாரியை போல் நடந்து வருகிறார். அவரது நடவடிக்கை களை பார்க்கும் போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் செயல்படுவது அப் பட்டமாக தெரிகிறது. மேலும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் கைப்பாவையை போல் இயங்கி வருகிறார். தொழில் நுட்ப பல் கலைக்கழகத்தின் துணை வேந்தராக ராஜசிறி நிய மிக்கப்பட்டது செல் லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க அந்த தொழில்நுட்ப பல் கலைக்கழகம் சம்பந்தப் பட்ட உத்தரவு. ஆனால், அந்த உத்தரவை பொது வாக கருதி 9 பல்கலைக் கழகங்களின் துணைவேந் தர்களை பதவி விலகு மாறு ஆளுநர் ஆரிப் முக மது கான் உத்தரவிட்டு உள்ளதை என்னவென்று சொல்வது?. ஆளுநர் கேரள அரசின் நிர்வாகத் துக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
எனவே, தேவைப் பட்டால் அவரை ஆளு நர் பதவியில் இருந்து திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம். அதே போல் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கு வது குறித்தும் ஆலோ சித்து வருகிறோம். இவ் வாறு பினராயி விஜயன் கூறினார்.
No comments:
Post a Comment