நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கழகக் கொடிக் கம்பத்தில் குமரி மாவட்ட கழகம் சார்பாக மாவட்ட தலைவர்
மா. மு. சுப்பிரமணியம் தலைமையிலும், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையிலும் கழக கொடியேற்றுவிழா நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், இளைஞரணி மாவட்ட தலைவர் இரா.இராஜேஷ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜே.ரி. ஜூலியஸ், பகுத்தறிவாளர்கழக செயலாளர் பெரியார்தாஸ், மகளிரணி மாவட்ட தலைவர் இந்திரா மணி, ஒன்றிய செயலாளர் இராஜீவ் லால், மாநகர துணைத் தலைவர் எச்.செய்க்முகமது, கன்னியாகுமரி யுவான்ஸ், பெரியார் வீரவிளையாட்டுக் கழக அமைப்பாளர் சிவக்குமார் தோழர்கள் செல்லையன், தங்கராசு, பாலகிருஷ்னன், தமிழரசன், தமிழ்மதி பி.கென்னடி, சி.அய்சக் நியூட்டன், முத்துவைரவன், அப்பாஜி, காட்வின், ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment