கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

கழகக் களத்தில்...!

19.10.2022 புதன்கிழமை

சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் பேராசிரியர் அ.கருணானந்தனின் பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு (2022-2023)

சென்னை: காலை 10.30 மணி * இடம்: எப்-50 அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் * தலைமை: பேரா.ச.கவுரி (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்) * சிறப்புரை: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி (தலைவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாடாளுமன்ற நிலைக்குழு) * முன்னிலை: 

பேரா. சுப.வீரபாண்டியன் (தலைவர், சமூகநீதி கண் காணிப்புக் குழு, தமிழ்நாடு அரசு) * பேரா. எஸ்.எஸ். சுந்தரம் (பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்)

திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: காலை: 9:30 மணி * இடம்: பனகல் சாலை, கழக அலுவலகம், திருவாரூர் * தலைமை: வீ.மோகன் மாவட்ட தலைவர் * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.செந்தமிழ்ச் செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) * பொருள்: 1, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா..., 2, தலைமைச் செயற்குழு முடிவை செயல்படுத்துவது, 3, விடுதலை சந்தா சேர்ப்பது, 4, இயக்க செயல் திட்டங்கள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். * அழைப்பது.... வீர.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் * திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழக கலந்து¬ராயடல் கூட்டம்

குடந்தை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்) * பொருள்: 1. 8.10.2022 அன்று நடைபெற்ற தலைமை செயற்குழுத் தீர்மானங் களை செயலாக்குதல், 2. 2.12.2022 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, 3.விடுதலை சந்தா சேர்த்தல் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,  பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம், மகளிரணி, வழக்குரை ஞரணி, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக)) மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்) * குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்

காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: பகல் 12.00 மணி * இடம்: குறள் அரங்கம், சண்முக ராசா சாலை, காரைக்குடி * தலைமை: 

ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை:  மதுரை வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), திருவெறும்பூர் மு.சேகர் (மாநில தொழிலாளணி செயலாளர்), சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) * பொருள்:  தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல். * வேண்டல்: கழகத்தின் அனைத்து அணித் தோழர்களின் தவறாத வருகை. * அழைப்பு: ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்) * காரைக்குடி கழக மாவட்டம்.

20.10.2022 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: நி.சித்து முருகானந்தம் (அணுத்துகள் ஆய்வாளர்) * பொருள்: நோபல் பரிசு (இயற்பியல்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).


No comments:

Post a Comment