அரசியல் பண்பாட்டைச் சிதைக்கிறது பா.ஜ.க.! தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

அரசியல் பண்பாட்டைச் சிதைக்கிறது பா.ஜ.க.! தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்!

சென்னை,அக்.29- திமுக செய் தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,

‘ஆட்டைக் கடித்து, மாட் டைக் கடித்து, மனிதனைக் கடிக்கிறது’ என்று தமிழிலே ஒரு சொலவடை உண்டு. அது தமிழ் நாடு பா.ஜ.க. தலைவர்  அண்ணா மலைக்கு முழுப் பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களை அநாகரிக மாகவும் தரம் தாழ்ந்த வகையிலும் பேசுவது பா.ஜ.க. நிர்வாகிகள் பலரது வழக்கமாக இருப்பதை ஊடக விவாதங்களில் பங்கேற்கும் கருத்தாளர்களும் பார்வையாளர் களும் நன்கு அறிவார்கள். கட் சியின் மாநிலத் தலைவர் பொறுப் பில் இருக்கும் அண்ணாமலை அந்த அநாகரிகப் படிக்கட்டுகளில் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டி ருக்கிறார்.

ஊடகச் சந்திப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக் குப் பதிலளிக்க முடியாமல் திணறும் பா.ஜ.க. நிர்வாகிகள், அத்தகைய கேள்வி எழுப்புவோரை நோக்கி, ஆன்ட்டி-இண்டியன் என்றும் கெட்-அவுட் என்றும் கொச் சைப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை   ஊடகத்தினருக்கு 'ரேட்' போடுவதும், ஏலமிடுவது மாக பல முறை இழிவுபடுத் தியிருக்கிறார்.

மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்ட போது, “மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே” என்று மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், “உங்களைச் சாப்பிட சொல் லிட் டுத்தானே போனேன்” என்று ஊடகத்தினரின் சுயமரியா தையை சுண்டிப் பார்க்கும் வகை யில் மேலும் மேலும் கொச்சைப் படுத்தியிருக்கிறார். செய்தியா ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய்.. பேய்.. என்று ஆளுந் தரப்பை விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரான  முதலமைச்சர் அவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது, பா.ஜ.க.வினர் எந்தளவுக்குத் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள் என்பதை எச் சரிக்கையுடன் சுட்டிக்காட்டி யதை இங்கு நினைவு கூர்கிறேன். அரசியல் கட்சிகளிடம் மட்டு மின்றி, ஊடகத்தினரிடமும் தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலை யின் தொடர்ச்சியான வாய்ச் சவடால் மூலமாகத் தமிழ்நாட் டின் அரசியல் பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் வேலையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. ஊடகத்தினரை இழிவுபடுத்திய பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குத் தி.மு.கழகத் தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தன் செயலுக்காக ஊடகத் தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்து, இனி யாவது நாகரிகமும் பண்பாடும் காத்திட வலியுறுத்துகிறேன்.

-இவ்வாறு டி.கே.எஸ்.இளங் கோவன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.


No comments:

Post a Comment