தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்குவதா? : வைகோ கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்குவதா? : வைகோ கேள்வி

திருச்சி, அக்.9 தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சிக்கிறார் என்று வைகோ கூறினார்.  

திருக்குறள் பற்றி தவறாக பேசுகிறார்

சென்னையில் இருந்து திருச் சிக்கு விமானம் மூலம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வந் தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதா வது;- திருக்குறள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ரவி திரும்பத் திரும்ப தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவா கருத்துகளை எப்படி யும் தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று சங்பரிவார் இயக்கங்களுக்கு துணையாக ஆளுநர் செயல்படுகிறார். திருக் குறளைப் பற்றி ஆல்பர்ட் சுவைட் சரை விடவா ஆராய்ச்சி செய்ய முடியும்.? உலகிலேயே இதற்கு நிகரான நூல் ஒன்றும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

திட்டங்களை முடக்க முயற்சி 

பவுத்த மதத்தில் கூட இப்படிப் பட்ட கருத்துகள் இல்லை. அப்ப டிப்பட்ட உயர்ந்த கருத்துகளை திருவள்ளுவர் சொல்லி இருக் கிறார். அதைப்போல ஜி.யு.போப் பும் சரியான முறையில் மொழி பெயர்த்து இருக்கிறார். தவறாக மொழி பெயர்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு கூட்டம் சதி வேலை செய்வதற்கு, ஆளுநர் துணை போவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். மேலும் 'திராவிட மாடல்' அரசு அனுப்பிய 14 மசோ தாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அவர் தமிழ்நாடு அரசின் திட்டங் களை முடக்க முயற்சிக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதாக பா.ஜ.க. தலைவர்கள், தங்கள் மனம் போன போக்கிற்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே கிடை யாது. இவ்வாறு அவர் கூறினார். 


No comments:

Post a Comment